(அனா )
இலங்கையில் வன அடர்த்தியினை 2018ல் 32 வீதமாக உயர்த்தும் எண்ணக்கருவான வனரோபா - 2017 வேலைத் திட்டம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.
இதனடிப்படையில் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையும், மட்டக்களப்பு மாவட்ட வனவள அலுவலகமும் இணைந்து ஆயிரம் மரக்கன்றுகளை புதிதாக நடும் வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
மியான்குள பிரதேசத்தில் பிரதேச சபையினால் திண்மக் கழவு கொட்டப்பட்ட காணியை மேம்பாடு செய்து அக்காணியினுள் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் தலைமையில் வியாழக்கிழமை மரங்கள் நட்டு வைக்கப்பட்டது.



0 Comments