அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்களினால் சீன-இலங்கை புகைப்பட கண்காட்சி திறந்துவைப்பு

சீனா-இலங்கை சங்கத்தினால் எற்பாடு செய்யப்பட்ட சீன-இலங்கை புகைப்பட கலைஞர்களின் புகைப்படக் கண்காட்சி கொழும்பு பல்கலைக்கழக அழகியற் பீடத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வை  பிரதம விருந்தினரான முன்னாள் இலங்கை கிரிக்கட் அணித்தலைவரும் தற்போதைய பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.  

இந்நிகழ்வில் சீன-இலங்கை அறுவது வருட நட்பு மற்றும் இராஜதந்திர உறவுகளை பற்றிப் பேசினார். இந்நிகழ்வில் இலங்கைக்கான சீன தூதுவர் சீ லியன்சின் அவர்கள் கலுந்து கொண்டு அமைச்சரை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது. 


Post a Comment

0 Comments