சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒருகட்டமாக



(யூ. கே. காலித்தீன்)
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விவகாரம் இதுவரை கைகூடாத நிலையில், இது தொடர்பான முன்னெடுப்புகள் கைகூடாமல் காலம்தாழ்த்தப்பட்டதற்க்கான காரணங்களை மக்கள் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தின் ஒருகட்டமாக, சாய்ந்தமருதிலுள்ள
18 மஹல்லா  பள்ளிவாசல்களின் ஊடாகவும், ஊர் மக்களை தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் நேற்று  (07) சாய்ந்தமருது அல்-ஹிலால் வீதியிலுள்ள தக்வா ஜும்மா பள்ளிவாசலில், சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனீபா தலைமையில்
ஆரம்பித்துவைக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, சாய்ந்தமருதிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் தினமும் சுழற்சி முறையில் இடம்பெறத்தக்க வகையில் பிரச்சார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக டாக்டர். என். ஆரிப், மௌலவி. எம். எஸ். எம். நுஹ்மான் (நழீமி) ஆகியோர் கலந்து கொண்டு விளக்கவுரை வழங்கினர்


Post a Comment

0 Comments