சமூக வலைத்தளம் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டதாகக், கூறி கைதுசெய்யப்பட்ட மாணவனை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர், இன்றைய தினம் கொழும்பு மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில், ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன் கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

0 Comments