ஜ.ரீ.என் வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளா்களுக்கு கலந்துரையாடலும் பயிற்சிப் பட்டரையும்

(அஷ்ரப் ஏ சமத்)

ஜ.ரீ.என் வசந்தம் தொலைக்காட்சிகளின் பிராந்திய ஊடகவியலாளா்கள் 200 பேருக்கு பத்தரமுல்லையில் உள்ள தலைமைக் காரியாலயத்தில்  கடந்த 29ஆம் திகதி தொலைக்காட்சி செய்தி பற்றிய கலந்துரையாடலும்  பயிற்சிப் பட்டரையும் நடைபெற்றது. இதில்  ஜ.ரீ.என் புதிய தலைவியும் ஊடக அமைச்சின் மேலதிகச் செயலாளருமான திருமதி  திலக்கா ஜயசுந்தர கலந்து கொண்டு   உரையாற்றினாா். இந் நிகழ்வில்  சிங்கள தமிழ் செய்தி பொறுப்பாளா்கள்  பிரதிப் பொது முகாமையாளா்  செய்திப் பிரிவு சுபாஸ் உட்பட  செயற்பாட்டுப் பணிப்பளாா்  பிரதான நிறைவேற்று அதிகாரியும் கலந்து கொண்டனா்.





Post a Comment

0 Comments